பொன்னியின் செல்வன் என்ற சோழ நாட்டு வரலாற்று புதினம் கொடூரங்களையும், சூழ்ச்சிகளையும் , வஞ்சகத்தையும் , தியாகத்தையும் , காதலையும் , மாவீரர்களையும் பேசுகிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் சிரத்தையுடன் நச்சென்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அருள்மொழி வர்மன் தான் புதினத்திற்கு தலைப்பை தந்தவன் ஆன போதிலும், வாணர் குல இளவரசன் வந்தியத்தேவனின் பயணப்பாதையில் தான் கதை முழுவதும் பயணப்படுகிறது. கதையை விட அந்தக்கால சுற்றுச்சூழல் அதிகமதிகம் வரண்ணனை செய்யப்பட்டுள்ளது. கதையின் காட்சிகளை அகக்கண்ணால் காணும் வண்ணம் பிரமாதமான முறையில் கதை சொல்லப்பட்டிருக்கிறது. கல்கியின் உழைப்பு எத்தகையது என்பதை முதல் பாகத்திலிருந்து ஐந்தாம் பாகம் வரை தொய்வின்றி கொண்டு செல்லும் பாங்கே நமக்கு உணர்த்தி விடுகிறது.
Related products
-5%
-5%
-5%
-5%
-5%
-5%
-5%
-5%
Reviews
There are no reviews yet.